search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெறுங்கள்-கீழப்பாவூர் பேரூராட்சி  அறிவிப்பு
    X

    சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெறுங்கள்-கீழப்பாவூர் பேரூராட்சி அறிவிப்பு

    • சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளலாம்.

    தென்காசி:

    நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் அறிவுறுத்துதலின்படி கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கீழப்பாவூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்கள் தங்களது நிகர சொத்துவரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி தங்களின் சொத்து வரிகளை பேரூராட்சியில் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×