

கடலூர்:
பண்ருட்டி மாளிகை மேடு புது காலனியை சேர்ந்தவர் சதீஷ்இவரது மனைவி ஜெயசங்கரி (வயது 35) இவர் கடந்த 26-ந் தேதி அன்று பக்கத்து வீட்டுக்குச் சென்று பேசி இருந்த பொழுது கணவர் சதீஷ் ஏன் அங்கெல்லாம் சென்று பேசுகிறாய் என்று கேட்டு திட்டியதால் ஜெயசங்கரி கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் கணவர் சதீஷ் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயசங்கரியை தேடி வருகின்றனர்