search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம்
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம்

    • பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைதலைவர் லதா முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் சுதர்சன் வரவேற்றார். பண்ணைக்காடு பேரூராட்சியில் 15 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் பேரூராட்சி கூட்டம் ஒவ்வொரு முறையும் 10 நிமிடங்களே நடப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் வார்டு வளர்ச்சிப்பணிகள், குறைகள் குறித்து கவுன்சிலர்கள் பேச கூட் டத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. பேரூராட்சித்தலைவரின் கணவர் கூட்ட அரங்கில் தலையிடுவதும், நிர்வாக விஷயங்களில் முழுமையாக தலையிடுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே புகார் அளிக்கின்றனர். உதயகுமார் காங்கிரஸ், 11-வது வார்டு கவுன்சிலர் பேசுகையில், பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவர் கணவர் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. தலைவருக்கு நிர்வாக விஷயத்தில் எவ்வித விபரங்களும் தெரியவில்லை. கூட்ட அரங்கில் தலைவரின் கணவர் பதிலளிக்கும் நிலை உள்ளது. பேரூராட்சியில் செய்யப்படும் வளர்ச்சிப்பணிகளில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறு கின்றன.

    தற்போது தீர்மானத்தில் கூட ஒரே பணி இரு இடங்களில் வந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் 10 நிமிடமே கூட்டங்கள் நடக்கின்றன. கவுன்சிலர்களுக்கு பேசும் அதிகாரம் மறுக்கப்படுகின்றது. ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கு வாய் பூட்டப்பட்டு அவர்கள் மிரட்டப்படுகின்றனர். அதிகாரிகளும் இதற்கு துணை புரிகின்றனர். தலைவரின் தன்னிச்சையான போக்கு அனைத்து கவுன்சிலர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் சுதந்திரமாக நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×