search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் சம்சா வியாபாரி கொலை
    X

    நூருல்லா சாகித்.

    கடலூர் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் சம்சா வியாபாரி கொலை

    • டலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி.
    • இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி. இவரும் இவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோர் இணைந்து சம்சா போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள். இதில் இரண்டு பேரும் கதறி துடித்தனர். இந்த சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவத்திற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இரண்டு பேரும் இருந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது நூருல்லா சாகித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் மேலும் இவரது தந்தை முகமது மொய்தீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இத் தகவல் இருந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட நூருல்லா சாகித்துக்கும் , அவரது குடும்ப உறவினருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று இரவு 2பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தினை சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். . கடலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக சம்சா வியாபாரியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×