search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருங்காவனத்தில் வீட்டின் முன்பு போடப்பட்ட பந்தல் தீ விபத்தில் எரிந்து நாசம்
    X

    தீ விபத்தால் நாசமான பந்தல்.


    குருங்காவனத்தில் வீட்டின் முன்பு போடப்பட்ட பந்தல் தீ விபத்தில் எரிந்து நாசம்

    • பூப்புனித நீராட்டு விழாவிற்காக குருங்காவனத்தில் வீட்டின் முன்பு பந்தல் போட்டுள்ளனர்.
    • தீ விபத்து தொடர்பாக சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள குருங்காவனம் கீழத்தெருவை சேர்ந்தவர் மாட சாமி ( வயது 36). இவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நாளை மறுநாள் ( 10-ந்தேதி) நடைபெற இருந்தது. இதற்காக அவரது வீட்டின் முன்பு ஓலை பந்தல் போட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் வீட்டின் முன்பு இருந்த பந்தல் திடீரென தீப்பிடித்தது.இதில் பந்தல் முழுவதும் தீயில் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×