search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    தென்காசியில் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    • தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக , கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக , கலெக்டர் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து சட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டங்களின் அனைத்து ஊராட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். 1994-ல் உருவாக்கப்பட்ட இச் சட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே நடை முறைப்படுத்த ப்பட்டுள்ளது. எனவே முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், கேரள மாநிலத்தை போல தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டரை ஊராட்சி தலைவர்களே முடிவு செய்ய வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி வலியுறுத்தப்பட்டது.

    இதில் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு சார்பாக பஞ்சாயத்து தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், தெற்கு கடையம் ராமலட்சுமி ராமதுரை, ஏ.பி.நாடானூர் அழகுதுரை , வெங்கடாம்பட்டி சாருகலாரவி, தர்மபுரமடம் ஜன்னத் சதாம், மடத்தூர் முத்தமிழ் ரஞ்சித், சிவசைலம் மலர் மதி சங்கர பாண்டியன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி,மந்தியூர் கல்யாணசுந்தரம், நல்லூர் ஊராட்சி சிம்சன்,கருவந்தா தானியேல், கீழ வீராணம் வீரபாண்டியன், மேலப்பாவூர் சொள்ளமுத்து மருதையா, கீழக்கலங்கல் சந்திரசேகர்,ஆயிரப்பேரி சுடலையாண்டி, மத்தளம்பாறை மைதிலி மகேஷ், சில்லரைப்புரவு குமார், பாட்டப் பத்து மாலதி பொன்னுச்சாமி, காசி மேஜர்புரம் குத்தாலம் இசக்கி பாண்டியன், வல்லம் மைதீன் பாத்திமா, சுமை தீர்ந்தபுரம் அருணாசலம், பிரானூர் ஆவுடையம்மாள் ராஜா, பெரிய பிள்ளை வலசை பொறியாளர் வேலுச்சாமி, கணக்கப்பிள்ளை வலசை ஈஸ்வரி, குத்துக்கல்வலசை ஊராட்சி சத்யராஜ், பாட்டாக் குறிச்சி அன்னலட்சுமி, திருச்சிற்றம்பலம் சந்திரா, உள்பட தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×