search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் 26-ந் தேதி பஞ்சாலை தொழிலாளர்கள் கருத்து கேட்பு கூட்டம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் 26-ந் தேதி பஞ்சாலை தொழிலாளர்கள் கருத்து கேட்பு கூட்டம்

    • கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இணை ஆணையர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி வேலை பழகு நர்களை தவிர பஞ்சாலை தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் பொருட்டு கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் திண்டுக்கல் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் கோபால கிருஷ்ணன் உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் உள்ளனர். இந்த குழுவினர் திண்டுக்கல் பகுதியில் பஞ்சாலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களை நேரடியாக சந்தித்து விபரங்கள் பெற உள்ளனர்.

    இக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இணை ஆணையர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் தொழி லாளர்கள் , தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலை யளிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்து க்களை தெரிவிக்க லாம் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

    Next Story
    ×