search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் குளத்தின் கரைகளில் பனை மர விதைகள் நடும் விழா
    X

    திருச்செந்தூர் குளத்தின் கரைகளில் பனை மர விதைகள் நடும் விழா

    • நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனைமர விதைகள் நடும் விழா நடைபெற்றது.
    • திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எல்பாஸ் விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனை மர விதைகள் நடும் விழா நடைபெற்றது. நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் கண்மணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் ஆசிரியர் பயிற்றுநர்கள் நபில் புஹாரி, ஜெகதீஸ்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலர் டாக்டர் எஸ்.யாபேஷ், நாடார் வியாபாரிகள் சங்க செயலர் செல்வக் குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர் அழகேசன், துணைச்செயலர்கள் சத்தியசீலன், பால கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல்பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் நன்றி கூறினார்.

    Next Story
    ×