search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டுக்குள் பெயிண்டர் மர்மசாவு
    X

    பூட்டிய வீட்டுக்குள் பெயிண்டர் மர்மசாவு

    • உடலில் படுகாயங்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது
    • செல்வபுரம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த தனகிரி (வயது 49) என்பவர் பூட்டிய வீட்டுக்குள் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக பேரூர் குமாரபாளையம் கிராமநிர்வாக அதிகாரி வெற்றிவேல், செல்வபுரம் போலீசில் புகார்அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வுசெய்தனர். இதில் தனகிரி உடலில் படுகாயங்கள் இருப்பது தெரியவந்தது.

    தனகிரிக்கு மதுப்பழக்கம் உண்டு. நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவார்.

    எனவே அவரது நண்பர்கள் தனகிரியை அடித்து படுகாயம் ஏற்படுத்தினரா, அல்லது குடிபோதையில் கீழே விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×