search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இரும்பு கேட் விழுந்து பெயிண்டர் பலி
    X

    கோவையில் இரும்பு கேட் விழுந்து பெயிண்டர் பலி

    • அப்புசாமி லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார்.
    • அஜாக்கிரதையாக செயல்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    கோவை,

    கோவை புலியகுளம் சவுரிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(58). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் கோவை அப்புசாமி லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு இரும்பு கேட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பத்மநாபன் மீது இரும்பு கேட் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் விஷ்னு கோபால் (28) ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×