search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த பெயிண்டர் பலி
    X

    கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த பெயிண்டர் பலி

    • சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீேழ விழுந்து விட்டார்.
    • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

    முரளி என்ற பெயிண்டர் தன்னுடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் (50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய 2 பேரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். 9.30 மணி அளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க தொடங்கினர். சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்தார். மற்ற இருவரும் கயிறை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழே விழுந்து விட்டார்.

    நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்ததின் தலையின் பின் பகுதி சுவரில் மோதியது. காயம் அடைந்த அவரை உடன் வேலை பார்த்தவர்களோ, அக்கம்பக்கத்தினரோ மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஒரு மணி நேரத்துக்கு பின் 108 ஆம்புலன்சு அங்கு வந்து சந்திரனை மீட்டுச் சென்றது. அரசு ஆஸ்பத்திரியில் சந்திரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுபற்றி வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மனித நேயம் மறத்து போய் விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

    Next Story
    ×