search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி  சோமநாத சுவாமி கோவிலில் பச்சை சாத்தி சப்பர பவனி
    X

    சப்பர பவனி தொடங்கிய போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் பச்சை சாத்தி சப்பர பவனி

    • 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினசரி காலையிலும் இரவிலும் சப்பரபவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    நேற்று 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் வெண்பட்டு உடுத்தி வெள்ளை சாதி சப்பரபவனி நடந்தது.

    இரவில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பச்சை பட்டாடை உடுத்தி வில்வம், மரிக்கொழுந்து மற்றும் பச்சை இலை மாலை அணிந்து ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபமாக பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    9-வது நாளான இன்று காலையில் பூஞ்சப்பர பவனி நடைபெற்றது. இரவில் பஞ்சமூர்த்திகளின் சப்பர பவனி நடைபெறுகிறது. நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழு ந்தருளி முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலா நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர், கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்த ஜன சபையினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×