

பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணியை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராசு திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொன்னேரி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பொன்னேரி, திருவெற்றியூர் சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளா விஸ்வநாதன் உடன் இருந்தனர்.