என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகம் திறப்பு
- பூலாம்பாடியில்உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தைதொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் திறந்துவைத்தார்
- வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
அரும்பாவூர்
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தலைவாசலில் இருப்பது போன்று மிகப்பெரியஅளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் என்பதால் டத்தோபிரகதீஸ்குமார் இந்த முயற்சியை சேவைநோக்குடன்
முன்னெடுத்துவருகிறார். இதுதொடர்பாக இரண்டு ஆலோசனை கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளது.இந்த நிலையில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தின் திறப்பு வி ழாநடைபெற்றது.அதில் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டுஅலுவலகத்தை திறந்துவைத்தார்.பின்னர் அவர் பேசும் போது,அனைவரின் கூட்டு முயற்சியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் மலேசியா மணிவாசகம், டத்தோ நேர்முக உதவியாளர் மணி,பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி செங்கு ட்டுவன்,கவுன்சிலர்கள் ராமதாஸ்,மாணிக்கம் மற்றும் கடம்பூர் பாலு, அருண்,ஆறுமுகம்,அக்ரி நவநீதன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்