search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களால் மட்டும்தான் ஒரு மிகச்சிறந்த குடும்பத்தை கட்டமைக்க முடியும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மகளிர் தின வாழ்த்து
    X

     ரூபி மனோகரன்

    'பெண்களால் மட்டும்தான் ஒரு மிகச்சிறந்த குடும்பத்தை கட்டமைக்க முடியும்'- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மகளிர் தின வாழ்த்து

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
    • பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஆண்களுக்கு தரப்படும் மதிப்பும், மரியாதையும் எங்களுக்கும் தரப்பட வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண் களுக்கு தரப்பட வேண்டும் என்று, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பெண்கள் போராடியதன் தொடர்ச்சியாக உருவானது தான் உலக மகளிர் தினம்.

    அணுவின்றி எதுவும் அசையாதோ, அதேபோல் பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை. சகோதரியாக, மனைவியாக, தாயாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணி வேராகத் திகழ்பவர்கள் பெண்கள்.

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். இது, நூற்றுக்கு நூறு உண்மை. பெண்களால் மட்டும்தான், ஒரு மிகச்சிறந்த குடும்பத்தை கட்டமைக்க முடியும். சிறந்த குடும்பங்களின் மாண்பும் பெண்களால்தான் பெருமை கொள்கிறது.

    நாமும் இந்த தருணத்தில் பெண்களை போற்றி பெருமை கொள்வோம்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    Next Story
    ×