search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நினைவு தினத்தையொட்டி 24-ந் தேதி நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை - மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா அறிக்கை
    X

    தச்சை கணேசராஜா

    நினைவு தினத்தையொட்டி 24-ந் தேதி நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை - மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா அறிக்கை

    • அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 35- வது ஆண்டு நினைவு தினம் வருகிற 24-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 35- வது ஆண்டு நினைவு தினம் வருகிற 24-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல் நிர்வாகிகள், அவரவர்கள் பகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×