search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 62 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 62 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் குடியரசு தினத்தன்று ஆய்வு செய்தனர்.
    • 62 நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் குடியரசு தினத்தன்று ஆய்வு செய்தனர்.

    இந்த தினத்தில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்.

    இந்தநிலையில் குடியரசு தினத்தன்று பணிக்கு அமர்த்தியிருந்த 37 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்து 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. 40 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்து 38 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    மொத்தம் 62 நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×