search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி ஆர்.கே.புரம் சாலையில்  புதரில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி
    X

    ஊட்டி ஆர்.கே.புரம் சாலையில் புதரில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி

    • 100 கிலோ ரேஷன் அரிசி குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது.
    • விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? மற்றும் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தநிலையில் ஊட்டி ஆர்.கே.புரம் சாலையில் உள்ள புதரில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர் வாசுகி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் 100 கிலோ ரேஷன் அரிசி ஆங்காங்கே குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி கூறுகையில் ரேஷன் அரிசியை மர்மநபர்கள் கடத்தி செல்லும்போது அதிகாரிகளிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

    Next Story
    ×