search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மருந்துத்துறையின் சார்பில்  சுகாதார பேரவை கூட்டம்
    X

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட சுகாதார பேரவை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. 

    தருமபுரி மருந்துத்துறையின் சார்பில் சுகாதார பேரவை கூட்டம்

    • மருந்துத்து றையின் சார்பில் தருமபுரி மாவட்ட சுகாதார பேரவை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • குடும்பநலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்து றையின் சார்பில் தருமபுரி மாவட்ட சுகாதார பேரவை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையின் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கி துணையுடன் சுகாதார பேரவை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் 30.12.2021 அன்று முதல் சுகாதார பேவை கூட்டம் நடைபெற்றது. அதில் 176 கோரிக்கைகள் முன்மொழியப்பட்டதில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் (TAEI) உள்ளிட்ட 26 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை சார்பில், உயர் சிறப்பு சிகிச்சை மையம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்டது. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் அவர்களால் பல்வேறு கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டது.

    வட்டார அளவில் மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை துணை இயக்குநர் சுகாதார பணிகள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களுடன் கூட்ட த்தில் விவாதிக்கப்பட்டது.

    இறுதியாக பஞ்சாயத்து தலைவர்கள், தன்னார்வ லர்கள் மற்றும் பொது மக்கள் உடன் கலந்துரை யாடப்பட்டது.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதார மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை மற்றும் குடும்பநலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் செளண்டம்மாள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தருமபுரி மருத்துவக்கல்லூரி இணை இயக்குநர் (புற்றுநோய், பொதுசுகாதாரம்) சம்பத், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×