அய்யலூர் அருகே பைக் மோதி மூதாட்டி சாவு

பாலாக்குறிச்சி என்ற பகுதியில் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள நொச்சிகுத்துப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி காளியம்மாள் (வயது75).இவர் இன்று காலை எரியோடு ரோட்டில் பாலாக்குறிச்சி என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய வாலிபரும் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரி யில் சேர்க்கப்பட்டு ள்ளார். இது குறித்து வட மதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com