search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்சாத்தம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி
    X

    மேல்சாத்தம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

    • முருக கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 70). இவர் வசந்தபுரத்தில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
    • திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், ராஜூ மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மேல்சாத்தம்பூர் அருகே முருக கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 70). இவர் வசந்தபுரத்தில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    திருச்செங்கோடு - பரமத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், ராஜூ மீது மோதியது. இதில் அவர் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    சிகிச்சை

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜூ உயிரி ழந்தார்.

    கார் பறிமுதல்

    இதுகுறித்து ராஜூவின் மனைவி சிவகாமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய குமா ரபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து, குமரேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×