search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    முதியவர் விஷம் குடித்து தற்கொலை

    • கடந்த 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
    • முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 61).

    இவருக்கு தீராத முழங்கால் வலி இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வலி சரியாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த

    11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டு உள்ளார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரி ழந்தார். இதுகுறித்து முத்து சாமியின் மகள் மாலதி (28) கொடுத்த புகாரின்பேரில், நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×