search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி மாயம்
    X

    மூதாட்டி மாயம்

    • சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் மூதாட்டி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பண்டார இடும்பமுதலியார் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 58).

    இவருடைய சகோதரி ராஜேஸ்வரி (60). கணவனை இழந்த ராஜேஷ்வரி கடந்த 17 வருடமாக தம்பி செல்வகுமாரின் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து செல்வகுமார் தாரமங்கலம் போலீசில் தனது சகோதரியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×