search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தினந்தோறும் ஒகேனக்கல்  குடிநீர் வழங்க வேண்டும்-  பொது மக்கள் கோரிக்கை
    X

    தினந்தோறும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை

    • ஒகேனக்கல் குடிநீரை தினமும் வழங்கவேண்டும்.
    • பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.

    நல்லம்பள்ளி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பச்சேரியன் கொட்டாய் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு மற்றும் 2 ஆழ்துளை கிணறும் உள்ளது.ஒகேனக்கல் குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் விநியோகம் செய்கின்றனர்.

    2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதால் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.மேலும் பாதி டேங்க் தண்ணீர் தான் விடுகின்றனர்.மேலும் ஆழ்துளை கிணறுகள் இரண்டும் பழுதடைந்துள்ளது.இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என பொது மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டால் நிதி இல்லை என கூறி பழுதடைந்த ஆழ்துளை மோட்டாரை சரி செய்ய மறுக்கிறார்.

    எனவே ஒகேனக்கல் குடிநீர் தினந்தோறும் வழங்கவும் மற்றும் பழுதடைந்த ஆழ்துளை மின்மோட்டாரை பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×