search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி- 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து
    X

    ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி- 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து

    • ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து தென்னக ரெயில்வே அறிவிக்கிறது.
    • இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரெயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக விரைவு ரெயில் ஆகியவை கடந்த 2-ந் தேதியன்று ஒடிசா பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே விபத்தில் சிக்கின. எனவே ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து தென்னக ரெயில்வே அறிவிக்கிறது.

    அதன்படி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து 5-ந் தேதி (இன்று) இரவு 7.20 மணிக்கு புறப்படும் ஹவுரா அதிவிரைவு மெயில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    அந்தவகையில் 123 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×