search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
    • 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மடியேந்தி போராட்டம் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் காலை சிற்றூண்டி உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆகிய நாங்கள் வரவேற்கிறோம்.

    அதே சமயத்தில் அதனை சத்துணவு ஊழியர் ஆகிய எங்களிடமே வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலம் முறை ஊதி யத்தை வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட செயலாளர் ராஜு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செய லாளர் ராணி, மாவட்ட பொருளாளர் அந்துவ ன்சேரல், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, நாகை வட்ட கிளையின் தலைவர் ரவிச்சந்திரன், சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் நிறைவுரை யாற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×