search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளி கொலை: முக்கிய குற்றவாளியை தேடி பீகார் விரைந்த தனிப்படை போலீசார்
    X

    வடமாநில தொழிலாளி கொலை: முக்கிய குற்றவாளியை தேடி பீகார் விரைந்த தனிப்படை போலீசார்

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(வயது18) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
    • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் காவலர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் ெரயில் மூலம் பீகார் சென்றுள்ளனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே செங்கோடகவுண்டன் புதூர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(வயது18) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    போலீசாரின் விசாரணையில் அவருடன் தங்கி இருந்த சங்கர் மாஞ்சி, உதான் சவுத்ரி மற்றும் பிண்டு மாஞ்சி ஆகிய 3 பேர் அவரை தலையில் கல்லை போட்டு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சங்கர் மாஞ்சி என்பவர் கைது செய்தனர். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற 2 பேரும் தப்பியோடி விட்டனர்.

    தலைமறைவான 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பீகாருக்கு சென்று கயா, நாளந்தா உள்ளிட்ட மாவட்டத்தில் ேதடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளான உதான் சவுத்ரி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் காவலர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் ெரயில் மூலம் பீகார் சென்றுள்ளனர்.

    Next Story
    ×