search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு குழுக் கூட்டம்
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு குழுக் கூட்டம்

    • வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.
    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் உள்ள வைகை இல்லத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கு கண்காணிப்புக்குழு அலுவலர்களை நியமித்து, மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவ லகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சி யர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவல கங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் உரிய வசதிகளை செய்து தருதல் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், உட்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளி கல்வித்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறும்பா ன்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை மற்றும் நெடுஞ்சா லைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொ ண்டார்.

    மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வைகை அணை பகுதியை பார்வை யிட்டு, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் வைகை அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×