search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் ரூ.3.86 கோடி மதிப்பில் நலத்திட்டஉதவிகள்- அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
    X

    கோத்தகிரியில் ரூ.3.86 கோடி மதிப்பில் நலத்திட்டஉதவிகள்- அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

    566 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்த கிரி வெள்ளநிவாரண மையத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டு 566 பயனாளிகளுக்கு, ரூ.3.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதனஒருபகுதியாக வருவாய்-பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் 12 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் 300 பேருக்கு ரூ.3 லட்சம் பெறுவதற்கான ஏ.டி.எம் கார்டுகள், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை யின்கீழ் 21 பேருக்கு ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 10 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் கடனுதவிகள், தோட்டக் கலைதுறை சார்பில் 14 பேருக்கு மானியவிலையில் ரூ.10.42 லட்சம் மதிப்பில் வேளாண்மை எந்திரங்கள் வழங்கப்பட்டது.

    ஆத்மா திட்டத்தின்கீழ் 6 பேருக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பில் விதைகள், முதல மைச்சரின் விரிவான மரு த்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் காப்பீட்டு அட்டைகள், மருத்துவம்-மக்கள் நலவாழ்வுதுறை சார்பில் 20 பேருக்கு மக்களைத்தேடி மருத்துவம் சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் மருந்து பெட்ட கங்கள், 10 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    வேளாண் பொறியி யல்துறை சார்பில் 6 பேரு க்கு டிராக்டர்க ளுக்கான மானியதொகை ரூ.25.57 லட்சம், சுழல்கருவி வாங்கு வதற்கு ரூ.6.20 லட்சம், 5 பேருக்கு ரூ.49,600 மதிப்பில் தேயிலை பறிக்கும் எந்திரம், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 86 பேருக்கு ரூ.21.50 லட்சம் மதிப்பில் பத்திரங்கள், மாவட்ட ஆதிதிராவிடர்-பழங்குடியி னர் நலத்துறை யின்கீழ் 3 பேருக்கு ரூ.16,740 மதிப்பில் தையல் மிஷின் கள், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் சுய உதவிகுழுவினருக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்பில் 10 பேருக்கு ரூ.4850 மதிப்பில் மடக்குகுச்சிகள், கருப்பு கண்ணாடி என மொத்தம் 566 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சரும், எம்.பி.யும் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கியில் கலை ஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு சேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிதலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாம கேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இயக்குனர் சிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் வாஞ்சிநாதன், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷனகு மார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் இப்ராஹிம்ஷா, ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கல்பனா,மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் சசிகுமார் சக்கரபாணி, பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்நல அலுவலர் ராஜேஷ்குமார், ஆதிதிராவிடர்-பழங்குடி யினர் நல அலுவலர் செல்வகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல்அமீத், மாவட்ட தொழில்மைய மேலாளர் சண்முகம் சிவா, மாவட்ட சமூக நல அலுவலர் பிர வீனா தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×