கோவில்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கோவில்பட்டி யூனியன், இனாம்மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனாட்சி நகரில், கோவில்பட்டி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.13.69 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தபோது எடுத்தபடம்.
பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தபோது எடுத்தபடம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி யூனியன், இனாம்மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனாட்சி நகரில், கோவில்பட்டி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.13.69 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகாலை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் சத்யா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், யூனியன் துணைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கட்சி நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜா, பழனிக்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com