search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணம்ஆன 10 நாட்களில் புதுப்பெண் மாயம்
    X

    திருமணம்ஆன 10 நாட்களில் புதுப்பெண் மாயம்

    • பென்னாகரம் அருகே திருமணம் ஆன 10 நாட்களில் புதுப்பெண் மாயம் ஆனார்.
    • தினேஷ்குமாரை கிழே தள்ளி விட்டுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது கீதாஞ்சலி காணவில்லை.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கொடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது27) விவசாயி. இவருக்கும் தருமபுரி மாவட்டம் செல்லமுடியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் கடந்த 18-ந்தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் 27-ந்தேதி அன்று கணவன்-மனைவி இருவரும் மதியம் பென்னாகரத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளனர்.

    பின்னர் படம் முடிந்து இருவரும் மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தினேஷ்குமாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு வரை சென்று விட்டு பிறகு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் பென்னாகரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வாழதாசம்பட்டி ரோடு, ஏரங்காடு பட்டுபூச்சி அலுவலகம் அருகில் வந்தபோது மற்றொரு ஒரு மோட்டர் சைக்கிளில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென்று தினேஷை வழி மறித்து நிறுத்தியுள்ளார்.

    பின்னர் அவர் மோட்டர் சைக்கிளில் இருந்த தினேஷ்குமாரை கிழே தள்ளி விட்டுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது கீதாஞ்சலி காணவில்லை. உடனே பல இடங்களில் தினேஷ்குமார் தேடிபார்த்தபோது தனது மனைவி கிடைக்கவில்லை. இதனால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து தினேஷ்குமார் பென்னாகரம் போலீசாரிடம் சினிமா பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கீதாஞ்சலியையும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரையும் தேடி வருகின்றனர். திருமணம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில் புதுபெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×