search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டிமாதா பேராலயத்தில் புதிய அதிபர் பொறுப்பேற்பு
    X

    புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சன் திருப்பலி நிறைவேற்றினார்.

    பூண்டிமாதா பேராலயத்தில் புதிய அதிபர் பொறுப்பேற்பு

    • கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயத்தில் புதிய அதிபராக அங்குள்ள தியான மைய இயக்குனர் ஆக பணியாற்றிய சாம்சன் நியமித்து கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராக சாம்சன் பொறுப்பேற்றுக் கொண்டார். கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, புதிய அதிபராக பொறுப்பேற்ற சாம்சனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய அதிபர் சாம்சன் பூண்டிமாதா பேராலயத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார். இதில் பல்வேறு பகுதியைச் சார்ந்த பங்குத் தந்தையர்கள் கலந்துகொண்டனர்.மாறுதலில் செல்லும் பாக்கியசாமி, பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குநர் ஆல்பர்ட், உதவி பங்குத் தந்தைகள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தைகள் அருளானந்தம், ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய அதிபர் சாம்சனை பூண்டிமாதா மக்கள் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    Next Story
    ×