search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் மாயம்
    X

    திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் மாயம்

    • கடந்த 7-ந் தேதி பத்மாவதி மறுவீட்டுக்கு அழைப்பு காரணமாக தாய் வீட்டிற்கு வந்தார்.
    • பதறிப்போன தந்தை மாது, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் சிங்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகள் பத்மாவதி (வயது19). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த மாதம் 29-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பத்மாவதி மறுவீட்டுக்கு அழைப்பு காரணமாக தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன தந்தை மாது, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாது மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மகளை பந்தாரஅள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னா மகன் சக்திவேல் என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என்றும், அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அருள், முனீஸ்வரி, ராணி, பழனி, திட்டப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி ஆகிய 5 பேரும் உடந்தையாக உள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சக்திவேல் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் மாயமான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×