search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கோட்ட  தபால் துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்- பாளையில் 29-ந் தேதி நடக்கிறது
    X

    நெல்லை கோட்ட தபால் துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்- பாளையில் 29-ந் தேதி நடக்கிறது

    • வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பாளை தலைமை தபால் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • நெல்லை கோட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை, அம்பை பகுதி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தபால் பணிகள் குறித்து குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விபரங்களுடன் தெரிவித்துக்கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவாஜிகணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பாளை தலைமை தபால் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நெல்லை கோட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை, அம்பை பகுதி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தபால் பணிகள் குறித்து குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விபரங்களுடன் தெரிவித்துக்கொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள் dotirunelveli.tn@indiapost.gov.in என்ற முகவரியில் குறைகள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 26-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×