என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.
- பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு கைலாச புரத்தில் அமைந்திருக்கும் சவுந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் அதிகாலையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி கைலாசநாதர்-சவுந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடயத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கொடி பட்டத்துடன் சுவாமி- அம்பாள் வீதி உலாவும், பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதியும், அதற்கு மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்