search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகில இந்திய அளவில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரிக்கு 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து
    X

    அகில இந்திய அளவில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரிக்கு 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து

    • நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி யானது 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது.
    • மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி யானது 2018-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது.

    மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டார்ட்அப் நிகழ்வில் பங்கேற்பது, லாபகரமான அறிவுசார் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.

    எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி கல்லூரி மாண வர்களுக்கு தொழில் முனை வோர் பயிற்சி மூலமாக தொழில் மானியம் பெறக் கூடிய சந்தர்ப்பங்களும், அதன் வாயிலாக புதிய தயாரிப்புகளை உருவாக்கக் கூடிய வாய்ப்பும் கிடைக் கிறது.

    கல்லூரியில் உள்ள 20 பயன்பாட்டு தொழிற்சாலை ஆய்வகங்கள் உள்ளடக்கிய இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் புதிய கண்டு பிடிப்புகளை தயாரித்து உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படு கின்றன. மேலும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் போட்டி, தேசிய அளவிலான போட்டி களில் பரிசுகள் வென்றுள்ள னர். ஆசிரியர்களும், மாணவர்களும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.

    இதனைக் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய அளவில் 3426 என்ஜினீயரிங் கல்லூரி நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற 142 கல்லூரிகள் பட்டியலில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி இடம் பெற்றுள்ளது.

    2018-ம் ஆண்டு முதல் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற ஊக்கம் அளித்த பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், முதல்வர் வேல்முருகன், தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபால ராயன் மற்றும் தொழில் முனைவோர் துறை துணை தலைவர் ராஜகுமார், கன்வீனர் பேராசிரியர் பிரேம் ஆனந்த், ஒருங்கி ணைப்பாளர்கள், உதவி பேராசிரியர்கள் மாரி யம்மாள், மேரி சுமிதா, சங்கீதா, பாலாஜி, ஷிர்லி மிர்ட்டில், ராஜ பிரியா, சுப்புலட்சுமி, சூரிய பிரபா, ஆர்த்தி உள்ளிட் டோரை ஸ்காட் கல்வி குழும கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×