search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே  மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர்   கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட சந்திரன் பறிமுதல் செய்யப்பட்ட பைக், சாராய பாக்கெட்டுகள்.

    வாழப்பாடி அருகே மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது

    • வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது அவர் மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், வாழப்பாடி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் அதிவேகமாக மோட்டார்சைக்கிளில் சென்ற வரை மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது அவர் மோட்டார்சைக்கிளில் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சாராயம் கடத்திச் சென்ற வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை புங்க மடுவு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவரை போலீஸார் கைது செய்தனர். கள்ளச்சாராயம் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? எங்கே காய்ச்சப்படுகிறது? இந்த கள்ளச்சாராயம் கடத்தலில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்பிருக்கிறாதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாரா யம் கடத்த பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×