search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    • சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
    • அவரது நண்பர் தங்கவேலுவுடன் மோட்டார் சைக்கிளில் பாலப்பட்டு சென்று விட்டு மீண்டும் தும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்தவர் கருக்கன் மகன் அழகேசன் (வயது 48). தொழிலாளி.இவர் அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் தங்கவேலுவுடன் மோட்டார் சைக்கிளில் பாலப்பட்டு சென்று விட்டு மீண்டும் தும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தங்கவேலு ஓட்டினார். மோட்டாம்பட்டி சாலையில் வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அழகேசன், தங்கவேல் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அழகசேன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×