

கடலூர்:
பண்ருட்டி அடுத்த மாளி கம்பட்டை சேர்ந்தவர் ரமேஷ் (44). இவர், பண்ருட்டி தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10-ந் தேதி அன்று மாலைவேலை முடிந்து தனது நண்பரோடு ஊருக்கு திரும்பும் பொழுது பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு முன்னாள் சென்ற பெண் திடீரென குறுக்கே வந்ததால் இவரது நண்பர் கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அதற்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுப்பிள்ளையர் குப்பம் ரவி மகன்கள் கணேஷ், ஹரிஹரன் ஆகியோர் தங்களை தான் ஓய் எனகத்தியதாக எண்ணிக்கொண்டு ரமேசையும் அவரது நண்பரையும் அசிங்கமாக திட்டி ஜாதி பெயரை சொல்லிஅடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரமேஷ்கொடுத்தபுகாரின் பேரில் காடாம்பு லியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சப் -இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த கீழ்காங்கேயன் குப்பத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 61)ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். இவர் அதேபகுதியில் உள்ளஅய்ய னார் கோவிலில் இரவு காவல ராக இருந்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி இவரும் இவரது மனைவியும் வழக்கம் போல் அய்யனார் கோவிலை பூட்டிவிட்டு வருவதற்காக கோவிலுக்கு சென்றனர்.கோவில் விளக்கை அணைத்த போது கோவிலின் கருவறை பின்புறம் உள்ள பகுதிகளில் குடித்துக் கொண்டு இருந்தஅதே ஊரை சேர்ந்த சிவக்குமார் மகன் விமல்ராஜ்,சம்பத்குமார் மகன்சதீஷ், இளங்கோ மகன்தயாநிதி மற்றும் துரைஆகியோர் புகழேந்தியை அசிங்கமாக திட்டி கழுத்தை பிடித்து நெரித்து அடித்து அவரது மனைவியை சேலை யை பிடித்து இழுத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில்புகார் கொடுத்தனர். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.