search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி ரூட் பள்ளியில் தேசிய கைப்பந்து போட்டி
    X

    கோத்தகிரி ரூட் பள்ளியில் தேசிய கைப்பந்து போட்டி

    • தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு

    அரவேணு,

    கோத்தகிரி ரூட் பள்ளியில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில் ஆங்கில பள்ளிகளுக்கான தேசிய மகளிர் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, மராட்டியம், உ.பி, மேற்குவங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சார்ந்த அணிகள் பங்கேற்றன.

    ஆண்களுக்கான கைப்பந்து இறுதிப் போட்டியில் ஏற்கனவே பஞ்சாப், பீகார் அணிகள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் பெண்கள் கைப்பந்து இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலாவதாக 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி மராட்டிய அணியை வீழ்த்தியது

    17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி 25-23, 25 -13 என்ற புள்ளிக் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.

    19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் பங்கு பெற்றன. இதில் தமிழ்நாடு அணி 25 -18 25க்கு 17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் வீராங்கனை பவுலினபிரிஷா, மேற்குவங்காள கவுன்சில் மேற்பார்வையாளர் சைலேஷ்பாண்டே, ஜூட்ஷ் பள்ளி நிர்வாகிகள் தன்ராஜன், சாம்ஜத், சரோ ஆகியோர் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×