கடையநல்லூர் அரசு கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. விளையாட்டு கலாச்சாரம் என்ற தலைப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர்ஆறுமுகம் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கம் நடந்தபோது எடுத்த படம்.
கருத்தரங்கம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய ஆக்கி அணி தலைவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான பிலிப்ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஆங்கில துறை தலைவர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். விளையாட்டு கலாச்சாரம் என்ற தலைப்பில் ஆறுமுகம் எடுத்துரைத்தார். சிகரம் நோக்கி என்ற தலைப்பில் பிலிப்ஸ் மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டில் சிகரத்தை எப்படி அடைவது என்பது பற்றி தனது கருத்துக்களை பதிவு செய்தார். விளையாட்டு, வீரர்களுக்கு தனது அறிவுரைகளை வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் பிரேமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் குரு சித்திர சண்முக பாரதி, பால் மகேஷ் பேபி மாலினி, மீனாட்சி , முருகன், துரை லிங்கம், சாம்சன் லாரன்ஸ், மாரி செல்வம், ராஜேஷ் கண்ணா, மாரியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com