search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் சிறப்பு மருத்துவ முகாமில் 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
    X

    மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் சரயு வழங்கிய காட்சி.

    கிருஷ்ணகிரியில் சிறப்பு மருத்துவ முகாமில் 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

    • கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 93 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தேசிய அடையாள அட்டையினை வழங்கினார்.
    • கிருஷ்ணகிரியில் கலெக்டர் தலைமையில் 2-வது கட்டமாக நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமினை மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி தொடங்கி வைத்து, 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இம்முகாம் ஏற்கனவே ஓசூரில் நடைபெற்றது. நேற்று 2-வது கட்டமாக நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 93 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இம்முகாமில், எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பொது மருத்துவம், கண் காது பரிசோதனை குறித்து சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×