search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு  கலெக்டர் பாராட்டு சான்றிதழ்
    X

    விழுப்புரத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்

    • விழுப்புரத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    • முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவையினை சிறப்பான முறையில் மேற்கொண்டனர்.

    விழுப்புரம்:

    தேசிய மருத்துவர் தினத்தினை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் மருத்து வர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவை யி னை சிறப்பான முறையில் மேற்கொண்ட மரகதம் மருத்து மனையின் மருத்து வர் தியாகராஜன் மற்றும் விழுப்புரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் பணிபுரியும் டாக்டர் கவாஸ்கர் ஆகியோரை கவுர வித்து பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முண்டி யம்பாக்கம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, துணை முதல்வர் சங்கீதா, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பொற்கொடி, நிலைய மருத்துவ அலுவலர் (பொ) வெங்கடேசன், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர், அலுவலக தேசிய நலக்குழும ஒருங்கிணைப்பு அலுவலர் ரகுநாத், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவ லக நிருவாக அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் இளங்கோவன் மற்றும் மாவட்ட காப்பீட்டுத் திட்ட விஜிலன்ஸ் அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×