குமாரபாளையத்தில் யுகாதி பண்டிகையையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வு

குமாரபாளையத்தில் யுகாதி பண்டிகையையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பஞ்சாங்கம் படித்து பலன்கள் சொல்லும் நிகழ்வு நடைபெற்றபோது எடுத்த படம்.
பஞ்சாங்கம் படித்து பலன்கள் சொல்லும் நிகழ்வு நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

குமாரபாளையம்:

தெலுங்கு வருட பிறப்பான யுகாதி திருநாளையொட்டி குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

 யுகாதி திருநாளையொட்டி குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் பஞ்சாங்கம் படித்து, ஆண்டு பலன், நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ள நல்லது, தீயது, மற்றும் அனைத்து ராசியினருக்கும் பலன்கள் சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கோவில் அர்ச்சகர் ஜெகதீஸ்வரன் பஞ்சாங்கம் படித்து பலன்கள் கூறினார். இதில் நகர பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பலன்களை கேட்டறிந்தனர். பொதுமக்கள் பலரது சந்தேகங்களுக்கு விளக்கமும் தரப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com