குமாரபாளையம் அருகே பலாப்பழம் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்து விபத்து

குமாரபாளையம் அருகே பலாப்பழம் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்து விபத்தானது.
விபத்துக்குள்ளான டெம்போவை படத்தில் காணலாம்.
விபத்துக்குள்ளான டெம்போவை படத்தில் காணலாம்.
Published on

குமாரபாளையம்:

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, இளையத்தடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 45). டெம்போ உரிமையாளர். இவர் நெய்வேலியிலிருந்து பலாப்பழங்கள் லோடு ஏற்றி வந்தார்.

அதிகாலை 2 மணி–அளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு கல்லூரி அருகே வரும் போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பழங்கள் சேதமானது. டெம்போவை ஓட்டிவந்த செல்வம் படுகாயம் அடைந்தார். இவர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து குமார–பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com