நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய சாலைப்பணியாளர்கள்.
ஆர்ப்பாட்டம் நடத்திய சாலைப்பணியாளர்கள்.
Published on

நாமக்கல்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க நாமக்கல் கோட்டம் சார்பாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலைப்பணியாளர்கள் என்ற வகையில் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்கவேண்டும், பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலு, செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com