குமாரபாளையத்தில் பகலில் பூட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம்

குமாரபாளையத்தில் பகலில் பூட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
.
.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது அடிக்கடி பூட்டப்படுவதாக புகார் எழுத்தது.

 இதனால் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், சுற்றுலா கார்கள், வேன்கள், டெம்போ ஓட்டுனர்கள்,பயணிகள், பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள், அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் என பலரும் அவதிக்கு ஆளாகின்றனர். 

இதே வளாகத்தில் ரோட்டரி கிளப் சார்பில் அமைக்கப்பட்ட பொதுக்கழிப்பிடம் உள்ளது. இதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் இதனை பரிசீலித்து இரு கழிப்பிடங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com