குமாரபாளையம் அருகே தொழிலாளியை பாட்டிலால் குத்தியவர் கைது

குமாரபாளையம் அருகே தொழிலாளியை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
,
,
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தில் வசிப்பவர் மாரிமுத்து(வயது 50) கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்  ராஜசேகரன்( 43).

 மாரிமுத்து, ராஜசேகரனுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார்.  பின்னர் அதை  மாரிமுத்து  திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த  ராஜசேகரன் தகாத வார்த்தையால் பேசி மது பாட்டிலை உடைத்து  மாரிமுத்துவை நெற்றி, பின் தலை, இடது நெஞ்சு, ஆகிய இடங்களில் குத்தியதாக தெரிகிறது. 

இதில் மாரிமுத்து பலத்த காயம் ஏற்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார்  ராஜசேகரனை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com