search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திராயன் -3 விண் வெளியில் தரையில் இறங்கியதைகேக் வெட்டி கொண்டாட்டம்
    X

    சந்திராயன் 3 விண் வெளியில் தரை இறங்கியதை கொண்டாடிய போது எடுத்த படம்.

    சந்திராயன் -3 விண் வெளியில் தரையில் இறங்கியதைகேக் வெட்டி கொண்டாட்டம்

    • சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை
    • பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் மகிழ்ச்சியினை தெரிவிக்கும் வகையில் அந்தப் பகுதியில் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள். குன்னமலை ஊராட்சி பாமகவுண்டம்பாளையம் பகுதியில் இருந்துதான் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் பரிசோதனைக்காக சந்திரனில் இருக்கும் மண் போலவே இந்த ஊரில் இருக்கிறது என்று எடுத்துச் சென்று விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நடவடிக்கைக்கு ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள பாறைகள் நிலவு மண்ணுடன் 99 சதவீதம் ஒத்துப் போவது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த பாறைகளை வெட்டி எடுத்து சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அனார்தசைட் இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் -3 ரோவரும் இறங்கி பழகி பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×