search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
    X

    மாரியம்மன் ராஜ மாதங்கி அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களையும் படத்தில் காணலாம். 

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப் பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப் பட்டு இருப்பதால் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில 14-ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. கல்வி அபிவிருத்தி, திருமண பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழி லில் நல்ல மேன்மை, நவகி ரக தோஷங்கள் விலக, குழந்தை பாக்கியம் என்பது உள்பட பல்வேறு பலன்கள் கிடைப்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டது.முன்னதாக லட்சுமி, கணபதி ஹோமம் நடந்தது. விநா யகர், பாலமுருகன், மாரி யம்மன் நித்திய சுமங்கலி கம்பம் ஆகிய வற்றுக்கு அபிஷேகம், ஆரா தனை நடந்தது. மாலையில் திரு விளக்கு பூஜை நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பூஜை வைத்து அம்மனை வழிபட்டனர்.

    நித்திய சுமங்கலி மாரி யம்மன் ராஜ மாதங்கி அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் வளா கம் முழுவதும் வேப்பிலை, வாழை, மா இலை தோர ணங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    Next Story
    ×